News August 22, 2025

செங்கை: இன்ஜினியரிங், டிப்ளமோ, ITI முடித்தவர்கள் கவனத்திற்கு!

image

ஆவடியில் உள்ள ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் கீழ் இஞ்சின் தொழிற்சாலையில் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ITI, டிப்ளமோ & இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.18,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். நேர்காணல் செபடம்பர் 15ம் தேதி நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 16, 2026

செங்கல்பட்டு: கடலில் குளிக்க சென்றவர் பிணமாக வந்த சோகம்!

image

செய்யூர், சோத்துப்பாக்கம் பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் சத்யபிரியன் (16) 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று காலை முகத்துவாரம் பகுதிக்கு குளிக்க சென்றபோது கடலில் மூழ்கி மாயமானார். அங்கிருந்த மீனவர்கள் இவரை மீட்டு, செய்யூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சூணாம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 16, 2026

தாம்பரம்: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

image

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள் வசதிக்காக வரும் ஜன.18-ந்தேதி நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்படும் ரயில் ராஜபாளையம் வழியாக மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க. மற்றவர்களுக்கு பயன்படும்.

News January 16, 2026

செங்கல்பட்டு இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு (ஜனவரி-15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!