News November 26, 2025
செங்கல்பட்டு: 12-ஆம் வகுப்பு மாணவன் அலையில் சிக்கி மாயம்!

திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் பிரம்மையன் (16), நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீனவர்கள் தேடியும் மாணவர் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 23, 2026
தாம்பரம் அருகே தலை நசுக்கிய நிலையில் கிடந்த சடலம்!

பெரும்பாக்கம் அருகேயுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதியில் உள்ள பூங்காவில் நேற்று இரவு தலை நசுங்கிய நிலையில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலையான நபர் எழில் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திகேயன் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 23, 2026
செங்கை மக்களே இனி உங்களுக்கு அலைச்சலே இல்லை!

செங்கல்பட்டு மக்களே, பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். 1) ஆதார் : https://uidai.gov.in, 2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in. 3) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in 4) செங்கல்பட்டு மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://chengalpattu.nic.in/ta/ இந்த தகவல்களை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News January 23, 2026
திமுக ஆட்சி ஒரு பூஜ்ஜிய ஆட்சி – அன்புமணி ராமதாஸ்

மதுராந்தகத்தில் நடைபெறும் NDA பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தற்போது பேசி வருகிறார். அதில் பேசிய அவர், “தமிழகத்தில் 6 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், 2021 தேர்தல் வாக்குறுதிகளில் 505-இல் வெறும் 66 வாக்குறுதிகளைதான் நிறைவேற்றியுள்ளனர்” எனவும் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியின் முடிவுக்கு இது ஒரு தொடக்கம் எனவும், இது ஒரு பூஜ்ஜிய ஆட்சி எனவும் தெரிவித்தார்.


