News November 14, 2025
செங்கல்பட்டு: லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில், பிரவின்குமார் என்பவரின் 2,400 சதுர அடி நிலத்தை பத்திர பதிவு செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்க முயற்சித்த சார் பதிவாளர் ரேவதி என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று (நவ.13) கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 12, 2025
செங்கல்பட்டு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊராட்சி செயல்களுக்கான காலி பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு இன்று ( டிசம்பர்-12) நடைபெறவிருந்த ஊராட்சி செயலாளர் பதவிற்கான நேர்காணல் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் நேர்காணலுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 52 ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
News December 12, 2025
செங்கல்பட்டு: டூவீலர், ஆட்டோ வாங்க ரூ.50,000 மானியம்

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News December 12, 2025
செங்கல்பட்டு: SBIல் சூப்பர் வேலை – ரூ.51,000 வரை சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, பாரத ஸ்டேட் வங்கிகளில் (SBI) customer relationship, executive உள்ளிட்ட 996 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.51,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் டிச.23ம் தேதிக்குள் இங்கே <


