News November 14, 2025
செங்கல்பட்டு: தலையில் பாறாங்கல் விழுந்து பலி!

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த வெளிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தூர்வாரும் பணி நடைபெற்றது. கிணறு தோண்டும் பொழுது தொழிலாளி கோவிந்தராஜ்(53) தலையில் பாறாங்கல் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். மேலும், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 16, 2025
செங்கல்பட்டு: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? மத்திய அரசின் டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க, டிச.24ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News December 16, 2025
செங்கல்பட்டு: 20 மான்கள் உயிரிழப்பு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காப்புக் காடுகளைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலி இல்லாததால், மான்கள் அடிக்கடி வெளியேறி விபத்துகளில் சிக்குகின்றன. நடப்பாண்டில் மட்டும், வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும், பிளாஸ்டிக் கழிவுகளை உண்டும் 20க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. காடுகளுக்குள் நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை நிலவுவதால், மான்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளது.
News December 16, 2025
செங்கல்பட்டு: 20 மான்கள் உயிரிழப்பு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காப்புக் காடுகளைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலி இல்லாததால், மான்கள் அடிக்கடி வெளியேறி விபத்துகளில் சிக்குகின்றன. நடப்பாண்டில் மட்டும், வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும், பிளாஸ்டிக் கழிவுகளை உண்டும் 20க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. காடுகளுக்குள் நீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை நிலவுவதால், மான்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளது.


