News October 12, 2025
செங்கல்பட்டு: இந்தியன் வங்கியில் வேலை!

இந்தியன் வங்கியில் உள்ள 171 சிறப்பு அதிகாரி (Specialist Officer – SO) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க நாளை (அக்.13) கடைசிநாளாகும். இதற்கு B.Tech/B.E, Post Graduate, M.Sc, MBA,MCA, போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிறவர்கள் https://indianbank.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளம் வழங்கப்படும்.SHAREit
Similar News
News December 11, 2025
செங்கல்பட்டு: ஆசிரியர் பணிக்கு 2,09,200 வரை சம்பளம்.. APPLY NOW!

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் 14,967 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கு, 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருந்தால் போதும், சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படுகிறது. டிச.11 இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு <
News December 11, 2025
செங்கல்பட்டு: பாரில் நடந்த தகராற்றில் ஒருவர் கைது!

தாம்பரம் சன்டோரியம் அருகே மதுக்கடையில் செய்யுரை சேர்ந்த தினேஷ் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது செம்பியத்தை சேர்ந்த அப்துல் ரகிம் தனது நண்பர்களுடன் வந்து தினேஷ் அருகே அமர்ந்தார். எதிர்பாராத விதமாக, இருவருக்கும் இடையே சண்டை நடந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய விசாரணையில், ரகிம் மீது ஏற்கனவே 3 வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அப்துல் ரகிமை கைது செய்தனர்.
News December 11, 2025
செங்கல்பட்டு: ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், டிச-15 முதல் 2025 பிப்ரவரி 3 வரை சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.உழவன், அனந்தபுரி மற்றும் ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் (வண்டி எண்கள்: 16866/16865, 20636/20635, 16752/16751) எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்தில் தங்கள் பயணத்தை முடித்துக்கொள்ளும் (வந்தடையும்) மற்றும் அங்கிருந்தே புறப்படும்.


