News August 22, 2024
செங்கல்பட்டில் 35 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த 35 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதனை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று (ஆக21) பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் ஆட்சியர் ச.அருண்ராஜ், சார் ஆட்சியர் நாராயண சர்மா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Similar News
News November 12, 2025
மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலக பொருட்கள் ஜப்தி

ஈ.சி.ஆர்., சாலையில் உள்ள தென்பட்டினத்தில் சாலை அமைக்கும் பணிக்காக பிரதீப் (ம) அவரது தந்தைக்கு சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தியது. இந்நிலையில் அரசு முறையான இழப்பீடு வழங்காததால் பிரதீப் மதுராந்தகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அறைகலன் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார் அதன் பேரில் இன்று ஜப்தி நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
News November 12, 2025
செங்கல்பட்டு: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே<
News November 12, 2025
செங்கல்பட்டு: 3 பேர் பலி; பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதில் அரசு தோல்வியை சந்தித்து வருகிறது என்று பசுமை தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 3 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.


