News November 14, 2025
சுற்றுச்சூழல் நாயகி காலமானார்!

கர்நாடகாவை சேர்ந்த புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், பத்மஸ்ரீ சாலுமரத திம்மக்கா காலமானார். ‘மரங்களின் அன்னை’ என கர்நாடக மக்களால் அன்போடு அழைக்கப்படும் இவர், சுமார் 80 ஆண்டுகளாக கணவருடன் சேர்ந்து, 8,000-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்துள்ளார். 114 வயதான அவர், வயது மூப்பு மற்றும் சுவாச பிரச்னை காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். வணங்குகிறோம் தாயே!
Similar News
News December 16, 2025
அரையாண்டு விடுமுறையில் மாற்றம்.. அரசு புதிய அறிவிப்பு

பள்ளிகளுக்கு டிச.24 முதல் ஜன.1-ம் தேதி வரை 9 நாள்கள் என விடுமுறை என்ற அறிவிப்பை அரசு மாற்றியுள்ளது. அதன்படி வந்துள்ள புதிய அறிவிப்பில் டிச.24-ம் தேதி முதல் ஜன.4-ம் தேதி வரை விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு 12 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது. ஆனால் புதுச்சேரியில் ஜன.1-ம் தேதி வரை மட்டுமே அரையாண்டு விடுமுறையாகும். SHARE IT.
News December 16, 2025
பார்பி டாலாக ஜொலிக்கும் ஸ்ரீலீலா

நடிகை ஸ்ரீலீலாவின் ஒரு நடனத்துக்காக தென் இந்தியாவில் இருந்து வட இந்தியா வரை சினிமா உலகமே காத்துக்கிடக்கிறது.. அப்படி பெர்ஃபாமன்ஸில் பின்னி பெடலெடுக்கும் ஸ்ரீலீலா, இன்ஸ்டாவில் ரசிகர்களின் மனதை சுண்டி இழுக்கவும் தவறுவதில்லை. வாரத்திற்கு ஒரு போட்டோஷூட்டை பகிர்ந்து இளைஞர்களின் தூக்கத்தை கொள்ளையடிக்கிறார். அப்படி நேற்று அவர் பகிர்ந்த போட்டோஸை மேலே SWIPE செய்து பாருங்கள்.
News December 16, 2025
பாஜகவை பார்த்து CM ஸ்டாலினுக்கு பதற்றம்: வானதி

TN-ல் பாஜக நுழைய முடியாது என <<18566154>>CM ஸ்டாலின்<<>> திருவண்ணாமலை கூட்டத்தில் பேசியதற்கு வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார். பாஜக குறித்த பதற்றம் CM ஸ்டாலினுக்கு உள்ளதால்தான் மேடைதோறும் மோடி, அமித்ஷா பற்றி தொடர்ந்து பேசி வருகிறார் என அவர் சாடியுள்ளார். மேலும் சட்டப்பேரவையில் கடந்த 4 ஆண்டுகளாக எங்களது கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


