News August 20, 2024
சுந்தர பெருமாள் கோவில் ரயில்வே கேட்டில் விபத்து

பாபநாசம் அருகே சுந்தர பெருமாள் கோவில் ரயில்வே கேட்டில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மோதியதில் ரயில்வே மின்சார கம்பி அறுந்து சேதமடைந்தது. இதனால் ஆந்திரா கச்சிகுடாவிலிருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் பாபநாசம் ரயில் நிலையத்திலும், சேலத்தில் இருந்து மாயவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் பண்டாரவாடை ரயில் நிலையத்திலும் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
Similar News
News January 15, 2026
தஞ்சை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

தஞ்சை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News January 15, 2026
தஞ்சை: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சாவூர் மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 15, 2026
தஞ்சை அருகே விவசாயி தற்கொலை

ஒரத்தநாடு அருகே திருநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணப்பா. விவசாயியான இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் விபத்து ஒன்றில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி கண்ணப்பாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் விளைவாக, மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை தூக்கிட்டு செய்து கொண்டார். இதையடுத்து ஒரத்தநாடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


