News October 16, 2024
சீர்மரபினர் நல வாரியம் சார்பாக முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக 24.10.24 அன்று முற்பகல் 11மணி முதல் மாலை 5 மணி வரை உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் மேற்படி முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்தார்.
Similar News
News July 7, 2025
கரூர்: அரசு கல்லுாரியில் இளநிலை பாடங்களுக்கு நேரடி சேர்க்கை

கரூர் மாவட்டம், குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் 2025–26 கல்வியாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பிளஸ் 2 முடித்தவர்கள், இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் சுஜாதா தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்காதவர்கள் மாணவர் சேவை மையத்தில் நேரில் வந்து சேர்க்கை பெறலாம். மேலும் வெளியூர் மாணவர்களுக்கு இலவச விடுதி வசதியும் வழங்கப்படுகிறது.
News July 7, 2025
கரூரில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 27 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<16974694>>தொடர்ச்சி<<>>
News July 7, 2025
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!