News March 19, 2024
சீர்காழி அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் படுகாயம்

சீர்காழி ரயில் நிலையத்தில் இன்று காலை திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற செந்தூர் விரைவு ரயில் நின்று கிளம்பியது. அப்போது அடையாளம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் நின்று புறப்பட்ட சில நிமிடங்களில் ரயிலின் பக்கவாட்டில் விழுந்து அடிபட்டு தலையில் படுகாயமடைந்தார். ரயில்வே போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 11, 2026
மயிலாடுதுறை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News February 11, 2026
மயிலாடுதுறை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

மயிலாடுதுறை மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <
News February 11, 2026
மயிலாடுதுறை: ரயில் சேவை மாற்ற அறிவிப்பு

ரயில்வே பராமரிப்பு பணியின் காரணமாக, மயிலாடுதுறையில் புறப்பட்டு திருச்சி வழியாக செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் வருகிற பிப்ரவரி 11, 13, 16, 18, 20, 23, 25, 27 ஆகிய தேதிகளில் ஆடுதுறையிலிருந்து புறப்பட்டு செல்லும், மயிலாடுதுறையில் இருந்து புறப்படாது. மேலும் திருச்சியில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வரும் ரயில், ஆடுதுறையில் நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


