News May 2, 2024
சீரான குடிநீர் வழங்குதல் தொடர்பாக ஆய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் இயக்குனர் பொன்னையா தலைமையில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 14, 2025
குன்னம்: முப்பெரும் விழாவில் பங்கேற்ற அமைச்சர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி லப்பைகுடிகாடு பேரூராட்சி கிழக்கு ஜமாளி நகரில், லப்பைகுடிகாடு கிழக்கு ஜும்ஆ பள்ளிவாசல் நடத்தும் முப்பெரும் விழா, மஸ்ஜித் குபா (பள்ளிவாசல்) திறப்பு விழா, ஷரீஅத் விளக்க விழா, நிஸ்வான் பட்டமளிப்பு விழா ஆகிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News December 14, 2025
பெரம்பலூர்: ரூ.96,210 சம்பளம்..வங்கியில் வேலை!

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-32 (SC/ST- வயது வரம்பு கிடையாது)
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 31.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 14, 2025
பெரம்பலூர் பெயர் காரணம் தெரியுமா?

முற்காலத்தில் பெரும்புலியூர் என்று அழைக்கப்பட்டு வந்த இந்நகரம் காலப்போக்கில் மருவி, தற்போது பெரம்பலூர் என அழைக்கப்படுகிறது. இதுபோல இப்பகுதியில் பிரம்பு மரங்கள் அதிகமாக விளைந்த காரணத்தால் அதிலிருந்து பல சாதனங்கள் இவ்வூர் மக்கள் தயாரித்து வந்த நிலையில், ”பிரம்பலூர்” என்றும், அது காலப்போக்கில் பெரம்பலூர் என மாறியதாகவும் கூறப்படுகிறது.


