News January 14, 2025
சிவகங்கை மாவட்டத்தில் பயிர் காப்பீடு அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டு குறுவை சாகுபடி (ராபி) பருவத்தில் விவசாயிகள் வாழை, வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். வெங்காயம் மற்றும் சிவப்பு மிளகாய் பயிருக்கு 31-01-2025, வாழை பயிருக்கு 28-02-2025 கடைசி தேதி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்ட விவசாயிகள் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
Similar News
News November 9, 2025
திருப்புவனத்தை சேர்ந்த நபர் இறுதிப்போட்டிக்கு தேர்வு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தைச் சேர்ந்த உச்சி மாகாளியம்மன், கோயில் தெருவில் வசிக்கும் ஆதித்யன், மதுரையில் நடந்த முதியோர்களுக்கான தடகளப் போட்டியில் பங்கேற்று இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அத்துடன் சென்னையில் நடக்கும் இறுதிப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என்று சிவகங்கை, மாவட்டம் சார்பாகவும் திருப்புவனம் பகுதி சார்பாக அனைத்து பொதுமக்களும் அவரை வாழ்த்தினர்.
News November 9, 2025
சிவகங்கை: ரூ.3 லட்சம் மானியம்; ஆட்சியர் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 10 நபர்களைக் கொண்ட குழுவிற்கு, நவீன சலவையகங்கள் அமைத்திட தகுதிகளின் அடிப்படையில் ரூ.3.00 லட்சம் மதிப்பீட்டிலான மானியத்தொகை வழங்கப்படவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News November 9, 2025
சிவகங்கை: ரூ. 300 GAS மானியம் பெற இத பண்ணுங்க!

சிவகங்கை மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். இங்கு <


