News November 25, 2025
சிவகங்கை: போலீசிடமே நகை, பணம் திருட்டு

திருப்புவனத்தைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தவள்ளி. இவர் திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருப்புவனத்திலிருந்து மானாமதுரைக்கு பேருந்தில் வந்தாா்.அப்போது அவா் தனது கைப் பையை பாா்த்தபோது அது திறக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன் நகைகள், ரூ 10 ஆயிரம், கைப்பேசி ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மானாமதுரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனர்.
Similar News
News January 19, 2026
சிவகங்கை: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சிவகங்கை மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 19, 2026
மானாமதுரை: ஒருவரை அரிவாளால் வெட்டிய கும்பல்!

மானாமதுரை மூங்கில் ஊருணி இலங்கைத் தமிழர் முகாம் முன்னாள் தலைவர் ஜெயேந்திரன் (49) மீது நேற்றிரவு அவரது வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத மூவர் அரிவாளால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலின் போது அவரது டூவீலரும் சேதப்படுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக மானாமதுரை போலீசார் தாக்குதலுக்கான காரணம், தாக்கியவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
News January 19, 2026
சிவகங்கைக்கு மத்திய அரசு சொன்ன GOOD நியூஸ்..

செங்கோட்டை, ராமேஸ்வரம், எர்ணாகுளம் விரைவு ரயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல மத்திய அமைச்சர் எல்.முருகன் ரயில்வே அமைச்சருக்கு பரிந்துரைத்துள்ளார். மக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கையை ஏற்று, ரயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


