News November 18, 2024
சிவகங்கை: பள்ளி விடுமுறையை தலைமையாசிரியர் அறிவிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் இன்று(நவ.18) பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த தகவலை சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ளார். மழையின் காரணமாக விடுமுறை அளிப்பதை அந்த பள்ளியின் தலைமையாசிரியரே முடிவெடுக்கலாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஆதலால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடமே விடுமுறை குறித்து கேட்டறியலாம்.
பகிரலாம்
Similar News
News December 15, 2025
சிவகங்கை : இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <
News December 15, 2025
நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் நவ.01ம் தேதிக்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறித்தவர்கள் புனித பயணம் மேற்கொண்டதற்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் வருகின்ற 28.02.2026 ஆம் தேதிக்குள் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி பயன்பெறலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
News December 15, 2025
தென்னை மரங்களுக்குக் காப்பீடு – ஆட்சியர் தகவல்

சிவகங்கையில் சுமார் 9127 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டாலோ அல்லது முற்றிலும் பயன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ இந்த இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகள் தங்களுடைய தென்னை மரங்களுக்குக் காப்பீடு செய்து பயன் பெறலாம்.மேலும் விவரங்களுக்கு வட்டாரத் தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்


