News October 11, 2025
சிவகங்கை: பணம் மோசடியில் காரைக்குடி கவுன்சிலர் கைது

மதுரை, பீபி குளம் பகுதியை சேர்ந்த கபில்முகமது என்பவர், கல்லூரி நண்பர் நூருல் சிகாபுதீன் மூலம் அறிமுகமான காரைக்குடி கவுன்சிலர் பிரகாஷ் உள்ளிட்டோர் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறியதை நம்பி, தனது பணம் மற்றும் நண்பர்களின் பணம் உட்பட மொத்தம் ரூ. 1. 80 கோடியை முதலீடு செய்து ஏமாந்தார். கபில்முகமது அளித்த புகாரின்பேரில், போலீசார் காரைக்குடி கவுன்சிலர் பிரகாஷை கைது செய்தனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
Similar News
News December 9, 2025
சிவகங்கை: இலவச தையல் மிஷின் – ஆட்சியர் அழைப்பு!

சிவகங்கை மாவட்டம், தகுதியுடைய முன்னாள் படைவீரர் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் ஆகியோர் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு வருகின்ற 15.12.2025 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
சிவகங்கையில் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 10.12.25 (புதன்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
சிவகங்கை: SBI வங்கியில் வேலை., தேர்வு இல்லை! APPLY NOW

சிவகங்கை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள்<


