News October 10, 2025
சிவகங்கை: நாய் குறுக்கே வந்ததில் ஒருவர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றியம் பிரம்புவயல் கிராமத்தை சேர்ந்த ராசு கண்டனூர் ஐசிஐசிஐ வங்கியில் இரவு காவலராக பணியாற்றி வருகிறார். ராசு கிராமத்தில் இருந்து வங்கி பணிக்கு இருசக்கர வாகனத்தில் காட்டுகுறிச்சி அம்பாள் நகர் வரும் போது எதிரே நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News November 9, 2025
திருப்புவனத்தை சேர்ந்த நபர் இறுதிப்போட்டிக்கு தேர்வு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தைச் சேர்ந்த உச்சி மாகாளியம்மன், கோயில் தெருவில் வசிக்கும் ஆதித்யன், மதுரையில் நடந்த முதியோர்களுக்கான தடகளப் போட்டியில் பங்கேற்று இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அத்துடன் சென்னையில் நடக்கும் இறுதிப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என்று சிவகங்கை, மாவட்டம் சார்பாகவும் திருப்புவனம் பகுதி சார்பாக அனைத்து பொதுமக்களும் அவரை வாழ்த்தினர்.
News November 9, 2025
சிவகங்கை: ரூ.3 லட்சம் மானியம்; ஆட்சியர் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 10 நபர்களைக் கொண்ட குழுவிற்கு, நவீன சலவையகங்கள் அமைத்திட தகுதிகளின் அடிப்படையில் ரூ.3.00 லட்சம் மதிப்பீட்டிலான மானியத்தொகை வழங்கப்படவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News November 9, 2025
சிவகங்கை: ரூ. 300 GAS மானியம் பெற இத பண்ணுங்க!

சிவகங்கை மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். இங்கு <


