News June 2, 2024

சிவகங்கை: குழந்தையை தீ வைத்துக் கொன்ற தாய் தற்கொலை

image

திருபுவனம், தவத்தாரேந்தல், வலையப்பட்டியை சேர்ந்த முருகன் -அழகு மீனாள் தம்பதியினருக்கு வேதாஸ்ரீ என்ற குழந்தை உள்ள நிலையில் இந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மனவிரத்தியில் நேற்று அழகுமீனாள் குழந்தையையும் தன்னையும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பின் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்து விட்டது. அழகு மீனாளை மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு சென்றபோது அவரும் இறந்தார்.

Similar News

News July 9, 2025

அஜித் கொலை வழக்கு – உயர்நீதிமன்றம் கண்டிப்பு

image

திருப்புவனம் அஜித்குமார் மரணம் தொடர்பாக திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி நாம் தமிழர் கட்சி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என பொது வெளியில் பேசுவதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது என்றும், மனுதாரர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என கண்டித்துள்ளது.

News July 9, 2025

சிவகங்கை: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு மதுரையில் நடைபெற உள்ளது. இந்த தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News July 9, 2025

பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

image

சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத் திட்டத்தில் 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் வருகின்ற 12.07.2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!