News August 19, 2024
சிலை செய்யும் போட்டி முதல் பரிசு ரூ.50,000

தெய்வீக, கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விநாயகர் சிலை வடிவமைக்கும் போட்டி நடைபெறவுள்ளது. வடிவமைத்த சிலையை செப்.1 முதல் 4 தேதிக்குள் உபதலை கிராமத்தில் உள்ள சாய் நிவாஸ் ஆசிரமத்தில் சமர்பிக்க வேண்டும் என்று குரு நவீன் சாய் அறிவித்துள்ளார். இதில், முதல் பரிசு ரூ.50,000, 2வது ரூ.10,000, 3வது பரிசு ரூ.7500 வழங்கப்படுகிறது.
Similar News
News January 25, 2026
நீலகிரியில் உச்சகட்ட பாதுகாப்பு!

குடியரசு தின விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள், லாட்ஜ் காட்டேஜ்களில் தீவிர சோதனை நடைபெற்ற வருகிறது. மேலும் வழிபாட்டுத்தலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாளை வரை பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுவர்.
News January 25, 2026
நீலகிரி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நீலகிரி மாவட்ட மக்கள் 04232443962 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News January 25, 2026
நீலகிரி மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். <


