News November 20, 2024
சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் – அண்ணாமலை

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் மேல் முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 15, 2025
கள்ளக்குறிச்சி: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

கள்ளக்குறிச்சி: வடகரைத்தாழனூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி, வசந்தி தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த வசந்தியிடம், பெருமணம் பகுதியைச் சேர்ந்த அஜித், வலுகட்டாயமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் நேற்று (நவ.14) அஜித்தை போலீசார் கைது செய்தனர்.
News November 15, 2025
கள்ளக்குறிச்சி: ரோந்து பணி விவரங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.14) இரவு முதல் இன்று (நவ.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியரின் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நிலையில்லா மிதிவண்டிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 81 பள்ளிகளில் 13 ஆயிரத்து 263 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும். என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.


