News August 6, 2024
சிதம்பரம்: கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு

சிதம்பரம் கொள்ளிடம் மற்றும் வெள்ளாற்றில் கதவணை கட்டும் திட்டத்தை மக்களுக்கு பயனளிக்காத திட்டம் என்று கூறி சமீபத்தில் தமிழக அரசு கைவிட்டது. அதனை கண்டித்து மீண்டும் தடுப்பணையை கட்ட வலியுறுத்தி வரும் ஆக.13-ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக சிதம்பரம் மற்றும் புவனகிரி வர்த்தகர் சங்கத்தினர் நேற்று கூட்டாக அறிவித்தனர்.
Similar News
News January 18, 2026
கடலூர்: பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

நெல்லிக்குப்பத்தை எடுத்து பண்ணை குச்சிபாளையத்தை சேர்ந்தவர் ஜனனம்(60).
இவர் கடந்த 2ஆம் தேதி மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த பைக் மோதி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News January 18, 2026
கடலூர்: மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை

காடாம்புலியூர் அடுத்த கீழ் மாம்பட்டை சேர்ந்தவர் தொழிலாளி வெங்கடேசன்(45). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் அவரது மனைவி சாந்தி(30) வெங்கடேசனை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த வெங்கடேசன் நேற்று தனது வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 18, 2026
கடலூர்: இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.17) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.18) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


