News August 21, 2024

சிதம்பரத்தில் மீனவர்களுக்கான கூடுதல் வசதி

image

கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட முடசலோடை மீனவர் கிராமத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் மீன் இறக்குவதற்கு கூடுதல் வசதிகள் அமைக்கும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சியை மூலமாக இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது கிள்ளை பேரூராட்சி தலைவர் மல்லிகா மற்றும் துணைத் தலைவர் வழக்கறிஞர் ரவீந்திரன் கலந்து கொண்டனர்.

Similar News

News January 17, 2026

கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News January 17, 2026

கடலூர்: போலீஸ் எஸ்.ஐ. விபத்தில் பலி

image

சிதம்பரம் அடுத்த மதுராந்தகநல்லூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (60). சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக பணிபுரிந்த இவர் நேற்று இரவு பணி முடிந்ததும் தனது பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். வி குமாரமங்கலம் அருகில் சென்ற போது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News January 17, 2026

கடலூர்: பைக் மோதி பெண் மரணம்!

image

காட்டுமன்னார்கோயில் அடுத்த மடப்புரத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி ஜெயக்கொடி (62). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள வயல் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக் ஜெயக்கொடி மீது மோதியதில், தலையில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!