News November 17, 2024
சர்வதேச நிதி மோசடி – மதுரையில் மேலும் இருவர் கைது

மதுரையில் சர்வதேச அளவில் முதலீடு செய்வதாக 96 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த வாரம் ஏற்கனவே 6 பேரை மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மதுரை மேலூரைச் சேர்ந்த அப்துல் ரகுமான், தெற்கு வாசலைச் சேர்ந்த சுல்தான் அப்துல் காதர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 14, 2025
மதுரை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

மதுரை மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேல் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களோடு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 14, 2025
மதுரை: குடும்பத் தகராறில் முதியவர் தற்கொலை.!

பேரையூர் அருகே கே.ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் பாட்டையா(60). மது போதைக்கு அடிமையான இவருக்கும் இவரது குடும்பத்தாருக்கும் தகராறு இருந்த வந்தது. இதனால் குடும்பத்தை விட்டு பிரிந்து தனித்து வசித்து வந்த இவர், நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News December 14, 2025
மதுரையில் போக்குவரத்து மாற்றம்.!

மதுரை, கோரிப்பாளையம் மேம்பால திட்டத்திற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி எம்.எம் லாட்ஜ் பகுதியிலிருந்து பனகல் சாலை செல்லும் வாகனங்கள், கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து சற்று வலதுபுறம் திரும்பி, தேவர் சிலையை சுற்றி இடது பக்கம் திரும்பி பனகல் சாலைக்கு செல்ல வேண்டுமென மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ வரைபடமும் கொடுக்கப்பட்டுள்ளது.


