News November 11, 2024
சரவணன் கொலை வழக்கில் 10 பேர் சிறையில் அடைப்பு

வெள்ளியம்பட்டியைச் சேர்ந்த சரவணன் கொலை வழக்கில், 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான, ரவுடி காட்டூர் ஆனந்தனின் மற்றொரு மைத்துனன் கார்த்தி(33). வெள்ளியம்பட்டியைச் சேர்ந்த உறவினர் கந்தசாமி(32). சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த பூபாலன்(27). மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்த ஹரி (எ) மதியழகன்(33) உள்ளிட்ட 10 பேர் போலீசில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 8, 2025
சேலம் கோட்டத்தில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள்!

சேலம் மாவட்டத்தில் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த தொடர் விடுமுறையை முன்னிட்டு, சேலம் கோட்டத்தில் நேற்று முதல் வருகிற 10-ம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு மையம் மற்றும் இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம். பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார்.
News November 8, 2025
இளம்பிள்ளையில் சாவிலும் இணை பிரியாத தம்பதிகள்!

சேலம் இளம்பிள்ளை அருகே, காந்திநகர் பகுதியில் வசித்து வந்த பெரியண்ணன் (80) மற்றும் அவரது மனைவி பாக்கியம் (70) இருவரும் மகனுடன் வசித்து வந்தனர். வயது முதிர்வு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நேற்று முன்தினம் மாலை பாக்கியம் உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் நேற்று நடைபெறுவதாக இருந்த நிலையில், மனைவியை இழந்த துக்கம் தாங்க முடியாமல் கணவர் பெரியண்ணனும் உயிரிழந்தார்.
News November 8, 2025
சேலம் இரட்டை கொலையில் மேலும் ஒருவர் கைது!

சேலம்: இளம்பிள்ளை அருகே 2 மூதாட்டிகள் நகைக்காக கொலை செய்யப்பட்டு, உடல் குட்டையில் வீசப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அய்யனாரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். அவரை விசாரித்ததில், தூதனூர் பகுதியை சேர்ந்த பூபதி என்பவரும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. மூதாட்டிகளின் உடல்களை குட்டையில் வீச பூபதி உதவியுள்ளார் என கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் பூபதியை அதிரடியாக கைது செய்தனர்.


