News July 5, 2025

சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருது – ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை கௌரவிக்கும் வகையில் தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதற்கு பழங்குடியினா் நல அலுவலகத்திற்கு ஜூலை 10-ஆம் தேதிக்குள் நேரில் வர வேண்டும் மயிலாடுதுறை ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 9, 2025

மயிலாடுதுறையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாகை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நாளை(டிச.11) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம். இதேபோல ஒவ்வொரு மாதமும் 2வது புதன்கிழமை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) ரேணுகா தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

மயிலாடுதுறையில் 22 பேர் கைது

image

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊக்குனர்கள் உள்ளிட்ட ஊராட்சி துறை பணியாளர்கள் அரசுக்கு 11 அம்ச கோரிக்கை வைத்தனர். அதனையெடுத்து அதற்கு அரசானை வெளியிட சென்னையில் நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு கொள்ளிடத்தில் இருந்து புறப்பட்ட தயாராக இருந்த 22 பேரை நேற்று முன்தினம் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.

News December 9, 2025

மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2025-ம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி வரும் டிச.,12-ம் தேதி அன்று காலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. அதில் 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 7401703459 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!