News January 9, 2025
சமயபுரம் கோவிலில் முன்னாள் பிரதமர் மகன் தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முன்னாள் பிரதமரின் மகனும், முன்னாள் மந்திரியுமான ரேவண்ணா நேற்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு விநாயகர், உற்சகாம்பாள், கொடிமரம் ஆகியவற்றை பக்தியுடன் வணங்கிச் சென்றார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News November 10, 2025
திருச்சி: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E / B.Tech
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
திருச்சி: காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

முசிறி பரிசல்துறை ரோடு, காவிரி ஆறு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைக்கப்பெற்றது. இதன் பேரில் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும், ஊதா நிற டவுசரும் ஊதா வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தார். கையில் பி.குமார் என பச்சை குத்தி இருந்தார் இவர் பற்றிய தகவல் தெரிந்தால் முசிறி போலீசாரிடம் தெரிவிக்கும்படி போலீசார் தெரிவித்துள்ளனர்.
News November 10, 2025
திருச்சி படுகொலை: அண்ணாமலை கண்டனம்

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருச்சி மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பில் ஒருவரை வெட்டி படுகொலை செய்திருப்பது, பொதுமக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது திருச்சியில் தான் தங்கியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு படுகொலை நடப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் அவலநிலையைக் காட்டுகிறது’.


