News October 9, 2024
சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை – ஆட்சியர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் குழந்தை திருமணம் தடைச் சட்டம் 2006 இன் படி குழந்தை திருமண சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கடந்த 2023 ஏப்ரல் 1 முதல் தற்போது 2024 மார்ச்.31 வரை 118 குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News November 15, 2025
விருதுநகரில் 4 மையங்களில் ஐடிஐ லெவல் தேர்வு

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான கணினி அடிப்படை தேர்வு நாளை 4 மையங்களில் நடைபெறுகிறது. மாவட்டத்தில் காலை 601 தேர்வர்கள், மதியம் 601 தேர்வர்கள் என 1202 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். காலை தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்குள்ளும், மதியம் தேர்வு எழுதுபவர்கள் மதியம் 2 மணிக்குள்ளும் தேர்வு கூட்டத்திற்கு ஹால் டிக்கெட் உடன் வர வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 15, 2025
சிவகாசியில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய உத்தரவு

சிவகாசி பகுதியில் 300 பட்டாசு ஆலைகள் என விருதுநகர் மாவட்டத்தில் 842 பட்டாசு ஆலைகள் உள்ளன. தமிழகத்தில் பட்டாசு தொழிலை ஒழுங்குபடுத்த பட்டாசு கழகம் அமைக்க தாக்கலான வழக்கில் சிவகாசி பகுதியில் சிறு, நடுத்தர, பெரிய பட்டாசு ஆலைகளில் நவ.28,29 அன்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
News November 15, 2025
விருதுநகர்: மத்திய அரசு பள்ளியில் வேலை ரெடி.. APPLY NOW

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் விவரம் அறிய & விண்ணப்பிக்க <


