News November 2, 2025
கோவை: 5 மாணவர்கள் GH-ல் அனுமதி

கோவை, திருமலையாம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் அறிவியல் கல்லூரி மாணவர் விடுதியில் நேற்று இரவு உணவு சாப்பிட்ட மாணவர்கள் 5 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுடன் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
Similar News
News November 6, 2025
கோவை இளம் பெண்ணை இழிவு படுத்திய நபர் கைது!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவரை கார்த்திக் என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக பேசியும் அவரை கண்டந்துண்டமாக வெட்ட வேண்டும் என்று வீடியோ வெளியிட்டார். இது குறித்து இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இன்று கார்த்திகை காவல்துறையினர் கைது செய்தனர்.
News November 6, 2025
கோவையில் பெண்ணிடம் ஆசை காட்டி மோசடி

சரவணம்பட்டியில் தனியார் நிறுவனம் நடத்தும் பெண்ணிடம் இரட்டை லாபம் தருவதாக கூறி ரூ.10 லட்சம் ஆன்லைன் மூலம் மோசடி செய்தனர். பின் அவர் கோவை சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், தென்காசி சென்று மோசடி செய்த ராஜு (41), முகமது அனீப் (44), அவருடைய மனைவி அன்னு (34) ஆகியோரை கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் என கோவை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
News November 6, 2025
கோவை மாணவி வன்கொடுமை: 59 இடங்களில் தீவிர ரோந்து!

கோவை சர்வதேச விமான நிலையம் அருகே மாணவி பாலியல் வன்கொடுமை
செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, கோவை மாநகரில் உள்ள 59 வெறிச்சோடிய இடங்களை போலீசார் அடையாளம் கண்டு கண்காணிப்பு திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, மாலை மற்றும் இரவு நேரங்களில் இவ்விடங்களில் ரோந்து அதிகரிக்க, அதிகாரிகள் டார்ச், சைரன், தடியுடன் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


