News April 5, 2024

கோவை: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்த ராமச்சந்திரன்(29) என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திலீப் (19) மற்றும் கௌரிசங்கர் (21) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவர் மீதும் இன்று (ஏப்ரல்.05) கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News February 7, 2026

கோவை அருகே குழந்தை உயிரிழப்பு

image

கோவையைச் சேர்ந்த சுதா என்பவருக்கு திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவருக்கு, அவரது தங்கை கவிதா ஒரு யோசனை கூறியுள்ளார். அதன்படி, அங்குள்ள ஒரு திருமணமாகாத பெண்ணுக்கு கடந்த 4-ம் தேதி பிறந்த குழந்தையை, ஒரு செவிலியர் உதவியுடன் சுதாவிற்கு பெற்று தந்துள்ளார். ஆனால், குழந்தை பேச்சு மூச்சின்று இருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 7, 2026

POWER CUT: கோயம்புத்தூரில் இங்கெல்லாம் மின்தடை

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்.7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, வெரைட்டி ஹால் ரோடு, தியாகி குமரன் மார்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம் ஒரு பகுதி, உக்கடம் ஒரு பகுதி, கலெக்டர் அலுவலகம், கோவை ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை, பீடம்பள்ளி, கலங்கல், பாப்பம்பட்டி, கண்ணம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News February 6, 2026

கோவை இரவு ரோந்து போலீசார் விபரம்!

image

கோவை மாவட்டத்தில் இன்று (06.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!