News March 22, 2024

கோவை: 17 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

image

கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோட்டூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தொடர் திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்த மதுரையை சேர்ந்த ராமச்சந்திரனை (38) கைது செய்தனர். பின் கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அவரை இன்று சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வருடத்தில் கோவையில் 17 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர் என்றார்.

Similar News

News November 18, 2025

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்!

image

கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை இணைந்து பிறப்பு மற்றும் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (நவ.18) கலெக்டர் பவன் குமார் தலைமையில் நடைபெற உள்ளது. பெற்றோர் இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தி உள்ளார்.

News November 18, 2025

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்!

image

கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை இணைந்து பிறப்பு மற்றும் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (நவ.18) கலெக்டர் பவன் குமார் தலைமையில் நடைபெற உள்ளது. பெற்றோர் இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தி உள்ளார்.

News November 18, 2025

தொண்டாமுத்தூர்: திமுக நிர்வாகிகள் 9 பேர் விடுதலை!

image

தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றி கருணாநிதியின் புகைப்படம் வைத்ததால் ஏற்பட்ட சர்ச்சையில், அதிமுக நிர்வாகிகளின் வாகனங்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக நிர்வாகிகள் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோவை மாவட்ட கூடுதல் 4-ஆம் நீதிமன்றம், திமுக நிர்வாகிகள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

error: Content is protected !!