News August 23, 2024
கோவை புதிய பாலத்தில் செல்பவர்கள் கவனத்திற்கு

கோவை காவல்துறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை வரை புதியமேம்பாலம் திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இதில் குனியமுத்துார், மதுக்கரை, பாலக்காடு சாலைக்கு செல்லும் வாகனங்கள் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏறி ஆத்துப்பாலத்தில் இறங்குமிடம் குறுகலாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் 30, 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லவும் என்று தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 10, 2025
கோவை மக்களே பயப்புடாதீங்க!

கோவை மக்களே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால், ஓட்டுரிமை விட்டு போய்விடுமோ? என்ற பயம் வேண்டாம். erolls.tn.gov.in/blo என்ற இணையதளத்தில் உங்கள் ஏரியாவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளும் அலுவலரின் செல்போன் எண்ணை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வீட்டுக்கு அலுவலர் எப்போது வருவார் என முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம். (SHARE)
News November 10, 2025
கோயம்புத்தூரில் இங்கு மின்தடை அறிவிப்பு

பெரியநாயக்கன்பாளையம், மருதூர், பவானி பேரேஜ், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம், கவுண்டம்பாளையம், நலம்லாம்பாளையம் பீடர், சாய்பாபா காலனி பீடர், இடையர்பாளையம் பீடர், சேரன்நகர் பீடர், லெனின் நகர் பீடர், சங்கனூர் பீடர் பகுதியில் உள்ள துணை மின்நிலையங்களில் நாளை(நவ.11) மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது . (SHARE)
News November 10, 2025
கோவை எம்பியின் சுற்றுப்பயணம் விவரம் வெளியீடு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ரூ.6.41 கோடி மதிப்பில் முடிவற்ற பணிகளை துவக்கி வைக்கவும், புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டவும் உள்ளார். இதில் மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்க உள்ளனர் என மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


