News August 7, 2025

கோவை: டிகிரி போதும்.. புலனாய்வுத் துறையில் வேலை!

image

கோவை மக்களே, இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு(Intelligence Bureau) அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். ஏதெனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஆக., 10-ம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். மத்திய அரசில் வேலை கிடைக்க அரிய வாய்ப்பு. டிகிரி முடித்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 14, 2025

காவலன் செயலி பதிவிறக்கம் செய்தால் வெள்ளி இலவசம்!

image

காவலன் செயலி குறித்து பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையைச் சேர்ந்த தனியார் நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீனிவாசன் புதிய திட்டத்தை அறிவித்து அனைவரும் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதன்படி வெள்ளி நகை சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்த பெண்கள் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்திருந்தால் ஒரு கிராம் வெள்ளியை இலவசமாக வழங்கி வருகிறார். இச்செயல் பெண்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

News November 14, 2025

கோவை: மக்கள் வெளியே நடமாட வேண்டாம்!

image

கோயம்புத்தூர் அருகே உள்ள ஆனைமலை பாசிபைத்தான்பாறை பகுதியில் சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி ஒன்று உயிரிழந்தது. இதனால் மேலும் ஒரு கூண்டு நேற்று கொண்டு வரப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் வைக்கப்பட்டது. எனினும் சிறுத்தை பிடிக்கும் வரை மாலை 6 மணிக்கு மேல் மக்கள் தேவை இன்றி வெளியே நடமாட வேண்டாம். நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் உடனே தகவல் தெரிவிக்க வனத்துறை அறிவித்துள்ளது.

News November 14, 2025

கோவை: மனைவியை கொன்று நாடகமாடிய கணவர்!

image

கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமார், மனைவி மகேஸ்வரியை ஓட்டுநர் சுரேஷ் கடந்த (அக்.28) ஆம் தேதி கொலை செய்து தடாகம் போலீசில் சரணடைந்தார். பின் விசாரணையில் அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமார் தான் கொலை செய்ய வைத்ததாக தெரிய வந்தது. பின் போலீசார் கவி சரவணகுமாரையும் தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!