News September 3, 2025

கோவை இலவச வீட்டு மனை பட்டா: பெறுவது எப்படி?

image

▶️கோவையில் 2,000 பேருக்கு<<17594170>> இலவச வீட்டு மனை<<>> பட்டா வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார் ▶️ இலவச வீட்டு மனை பட்டா திட்டத்தில் நகர்ப்புறங்களில் 2 சென்ட், கிராமப்புறங்களில் 3 சென்ட் நிலம் வழங்கப்படும் ▶️ ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் விண்ணபிக்கலாம்.SHAREit

Similar News

News November 7, 2025

கோயம்புத்தூர்: யூடியூபருக்கு சிறை

image

முன்னாள் தவெக நிர்வாகி வைஷ்ணவி அண்மையில் Ex.அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார். அவர் கரூர் சம்பவம் குறித்து ஏஐ மூலம் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு விஜய் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் கார்த்திக் என்பவர் வைஷ்ணவிக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்தார். இந்நிலையில், கோவை சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News November 6, 2025

கோவை இளம் பெண்ணை இழிவு படுத்திய நபர் கைது!

image

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவரை கார்த்திக் என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக பேசியும் அவரை கண்டந்துண்டமாக வெட்ட வேண்டும் என்று வீடியோ வெளியிட்டார். இது குறித்து இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இன்று கார்த்திகை காவல்துறையினர் கைது செய்தனர்.

News November 6, 2025

கோவையில் பெண்ணிடம் ஆசை காட்டி மோசடி

image

சரவணம்பட்டியில் தனியார் நிறுவனம் நடத்தும் பெண்ணிடம் இரட்டை லாபம் தருவதாக கூறி ரூ.10 லட்சம் ஆன்லைன் மூலம் மோசடி செய்தனர். பின் அவர் கோவை சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், தென்காசி சென்று மோசடி செய்த ராஜு (41), முகமது அனீப் (44), அவருடைய மனைவி அன்னு (34) ஆகியோரை கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் என கோவை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். 

error: Content is protected !!