News September 28, 2025
கோவை அருகே பெண் யானை உயிரிழப்பு!

கோவை வால்பாறை, பன்னிமேடு எஸ்டேட் பங்களா டிவிஷன் தேயிலை தோட்டம் பகுதியில், யானை சடலம் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குநா் சகலா பாபு முன்னிலையில், வனக்கால்நடை மருத்துவா் வெண்ணிலா தலைமையிலான மருத்துவ குழுவினா் யானையின் உடலை கூறாய்வு செய்தனா். இதில் உயிரிழந்தது சுமாா் 2.5 வயதுள்ள பெண் யானை என்பதும் உடல்நல குறைவால் யானை உயிரிழந்தது தெரிந்தது.
Similar News
News November 17, 2025
மோடி வருகை: கோவையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 19.11.2025 புதன்கிழமை கோவை வருகை புரிவதை முன்னிட்டு, நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை கோவையில் போக்குவரத்து மாற்றம் அமலாகிறது. அதன்படி, அவினாசி ரோடு, ஜி.டி.நாயுடு மேம்பாலம் உள்ளிட்ட சாலைகள் தற்காலிகமாக மூடப்படும். கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவு தடை, விமான நிலையத்தில் வாகன நிறுத்தம் தடை. பொதுமக்கள் மாற்றுப்பாதை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News November 17, 2025
மருதமலை வருகை தந்த பிரபல நடிகர்!

கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் 7-வது படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது .இங்கு நேற்று நடிகர் சந்தானம் வருகை வந்தார். பின்னர் பஞ்சமுக விநாயகர், ஆதி மூலஸ்தானம், சுப்பிரமணிய சுவாமி ஆகிய சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து அவர் ராஜகோபுரம் வழியாக வெளியே வந்தார். அப்போது அவரை அடையாளம் கண்ட பக்தர்கள் சிலர் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
News November 17, 2025
பிரதமர் மோடி வருகை; கோவையில் இதற்கு தடை!

பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19ம் தேதி கோவை வரவையொட்டி, விமான நிலையத்தில் வாகன நிறுத்தத்துக்கு தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 18 காலை 6 மணி முதல் 19 மாலை 6 மணி வரை டெர்மினல் முன் மற்றும் Y-ஜங்ஷனில் வாகன நிறுத்தம் தடை செய்யப்பட்டுள்ளது. பிக்கப், டிராப் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை முழுவதும் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.


