News May 2, 2024
கோவை அருகே தங்கும் விடுதிக்கு சீல்

வால்பாறையை குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் ஸ்ரீராம் தேயிலை தோட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த தோட்ட வளாகத்தில் தங்கும் விடுதி கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியிருந்த வால்பாறை கூட்டுறவு காலனியை சோ்ந்த ராம் பிரசாத், ஸ்டேன்மோா் எஸ்டேட்டை சோ்ந்த பிரபு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போலீசாரின் விசாரணையில் விடுதி அனுமதியின்றி செயல்படுவது தெரிந்து அதனை நேற்று சீல் வைத்தனர்.
Similar News
News December 16, 2025
கோவையில் மதுவிற்பனை செய்த இரண்டு பேர் கைது!

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் என்று வெளியிட்ட அறிக்கையில் கோவை மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுவிற்பனை ஈடுபட்ட மனோகரன் (52) மற்றும் தமிழ்செல்வம் (35) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 53 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News December 15, 2025
கோவை இரவு ரோந்து போலீசார் விவரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (15.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
கோவையில் மதுவால் வந்த வினை: பறிபோன உயிர்!

கோவை சூலூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம், மது அருந்தும் பழக்கம் உடையவர். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியபோது நேற்று காலை கணபதி எப்சி ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே, அளவுக்கு அதிகமான மது அருந்திவிட்டு, மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


