News August 23, 2024
கோவையில் 22 அதிகாரிகளுக்கு விருது

கோவை மாவட்டத்தில் வீரதீர சாகசங்கள் புரிந்த 22 காவல்துறையினர் அண்ணா விருதுக்கு தேர்ச்சியடைந்துள்ளனர். ஆண்டு தோறும் தமிழக காவல்துறையில் திறம்பட பணியாற்றும் காவல்துறையினருக்கு அண்ணா விருது தமிழக முதல்வர் கைகளில் வழங்கபடுவது வழக்கம். இதன் அடிப்படையில் இந்த ஆண்டு இன்று (ஆக.23) வழங்கப்பட உள்ளது . இதற்காக கோவை மாநகரில் 15 பேரும், புறநகர்ப் பகுதியில் 7 பேர் என 22 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Similar News
News November 14, 2025
கோவை: திறம்பட செயல்பட்ட 51 காவலர்களுக்கு பாராட்டு

கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கொலை, கொள்ளை, திருட்டு, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் திறம்பட செயல்பட்ட 51 காவலர்களை பாராட்டி, அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். கூட்டத்தில், கோவை புறநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறையினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
News November 13, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (13.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
ஆன்லைன் விண்ணப்பத்தில் குழப்பங்கள்: அண்ணாமலை!

கோவை சின்னியம்பாளையத்தில் பா.ஜ.க விவசாயிகள் அணிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, வாக்காளர் பட்டியல் திருத்தப் படிவம் மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்தில் பல குழப்பங்கள் உள்ளன. இதற்கு தலைமை தேர்தல் அதிகாரி உடனே தீர்வு காண வேண்டும் என்றார். மேலும் நவ.19 அன்று பிரதமர் மோடி கோவையில் இயற்கை விவசாயிகளை சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.


