News November 18, 2024
கோவில் யானை தாக்கியதில் குமரியை சேர்ந்தவர் பலி

திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை தாக்கி பாகன் உதயன், அவரது உறவினர் சிசுபாலன் இன்று உயிரிழந்தனர். யானை கட்டப்பட்டுள்ள இடத்தில் இருந்த யானை பாகனையும் அவரது உறவினர் சிவபாலனையும் திடீரென கோவில் யானை தெய்வானை மிதித்துள்ளது. இதில் இருவரும் உயிர் இழந்தனர். உயிரிழந்த சிசுபாலன் குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்தவர் ஆவார். சிசுபாலன் உயிரிழப்பு அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 12, 2025
குமரியில் மனைவி, மாமியார் மீது தாக்குதல்

திங்கள்நகர் பகுதியை சேர்ந்தவர் நித்யா. கணவருடன் விவாகரத்து பெற்று பெண் குழந்தையுடன் தாய் வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் நித்யாவுக்கும், குளச்சல் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் பழக்கமாகி குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்பு சுரேஷின் செல்போனில் விவாகரத்தான பல பெண்களை குறிவைத்து Instagramல் பேசியுள்ளார். இதுபற்றி கேட்ட நித்யா (ம)அவரது தாயரை தாக்கிய சுரேஷ் அவரது தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு.
News December 12, 2025
நாகர்கோவில் ரயிலில் கேட்பாரற்று கிடந்த பை

ஜம்முதாவிலிருந்து இன்று (டிச.12) அதிகாலை ஒரு மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இரண்டு பைகள் அனாதையாக கிடந்தது. அதனை ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீசாரும், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் சோதனை செய்த போது அதில் ஐந்து கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News December 12, 2025
குமரி மக்களே ரேஷன் கார்டு இருக்கா.. முக்கிய அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் குடிமை பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் கார்டு சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் நாளை (டிச.13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு செய்தல் போன்றவை குறித்து மனுக்கள் அளிக்கலாம். எல்லோரும் இதை தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.


