News November 28, 2024
“கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் போராட்டம் தீவிரமாகும்”

தமிழகத்தில் வருவாய்த்துறையில் காலியான 3,000 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். மண்டல துணை தாசில்தார்களின் பட்டா மாறுதல் அதிகாரத்தை பறிக்க கூடாது. இதுபோன்ற 8 அம்ச கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம் தீவிரமாகும் என சிவகங்கையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் தமிழரசன் தெரிவித்தார்.
Similar News
News December 7, 2025
சிவகங்கை: ஆதார் கார்டில் இலவச முகவரி மாற்றம்..!

சிவகங்கை மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.<
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க
News December 7, 2025
சிவகங்கை: கிரேன் மோதி ஒருவர் பரிதாப பலி!

மதுரை மாவட்டம், சாமநத்தம் கிராமத்தைச் சோ்ந்த தங்கராஜ் மகன் முத்துக்கருப்பன் (45). இவா் திருப்புவனம் ஒன்றியம் புலியூரில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த கிரேன் இயந்திரம் முத்துக்கருப்பன் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் கிரேன் ஓட்டுனர் தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News December 7, 2025
காரைக்குடியில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள பேயன்பட்டியை சேர்ந்த சுப்பு என்பவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் மலைப் பாம்பு இருப்பதாக காரைக்குடி தீயணைப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தீயணைப்பு வீரர்கள் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையிடம் நேற்று ஒப்படைத்தனர்


