News July 11, 2024
கோயில் குடமுழுக்கு நடத்த தடையில்லை

திருவான்மியூரில் உள்ள பாம்பன் சாமி கோவில் நாளை(12.7.24) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கும்பாபிஷேகம் நடத்த எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டது. இக்கோவில் அறநிலைத்துறை சார்பில் ரூ.1.12 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நாளை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News July 8, 2025
சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு 2/2

சென்னையில் இன்று (ஜூலை 8) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, போரூர், காரம்பாக்கம், ஐயப்பன்தாங்கல், திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், நடேசன் ரோடு, நடுக்குப்பம், மையிலாப்பூர், ஆர்.கே.சாலை, சிட்லப்பாக்கம், சேலையூர், மாடம்பாக்கம், அடையாறு, சாஸ்திரி நகர், டீச்சர்ஸ் காலனி, செம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள்
News July 8, 2025
சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு 1/2

சென்னையில் இன்று (ஜூலை 8) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், கே.கே நகர், அசோக் நகர், வடபழனி, பி.டி ராஜன் சாலை, ராணி அண்ணா நகர், சைதாப்பேட்டை ரோடு, காமராஜர் சாலை, நடேசன் சாலை, 100 அடி ரோடு, ஆற்காடு ரோடு, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், அரும்பாக்கம், வள்ளுவர் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள். <<16986157>>தொடர்ச்சி<<>>
News July 8, 2025
சென்னை சைபர் குற்றப்பிரிவு ரூ.2.96 கோடி மீட்பு

சென்னை சைபர் குற்றப்பிரிவு ஜூன் 2025-ல், 146 புகார்களில் ரூ.2.96 கோடி பணத்தை மீட்டு சாதனை புரிந்துள்ளது. இதில் மத்திய மண்டலம் மட்டும் ரூ.2.30 கோடியை மீட்டுள்ளது. வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மண்டலங்களிலும் கணிசமான மீட்பு நடந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு இதுவரை மொத்தம் ரூ.15.30 கோடி மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.