News March 25, 2024
கேரள ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம்

கோவை வழியாக செல்லும் கேரள ரயில்கள் போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்தான செய்தி குறிப்பில், மார்ச் 26, 28, 30 ஆம் தேதிகளில் பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக ஆலப்புழா – தன்பாத் விரைவு ரயில், எர்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில் போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையம் வருவது தவிர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News November 11, 2025
கோவையில் இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு

பெரியநாயக்கன்பாளையம், மருதூர், பவானி பேரேஜ், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம், கவுண்டம்பாளையம், நலம்லாம்பாளையம் பீடர், சாய்பாபா காலனி பீடர், இடையர்பாளையம் பீடர், சேரன்நகர் பீடர், லெனின் நகர் பீடர், சங்கனூர் பீடர் பகுதியில் உள்ள துணை மின்நிலையங்களில் கீழ் உள்ள ஊர்களில் இன்று (நவ.11) மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இன்று காலை 9 மணி டூ மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. SHARE
News November 11, 2025
மேட்டுப்பாளையம் மக்களே! ஜாக்கிரதை

மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் அழைத்த மர்மகும்பல் கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும், அதற்காக ஜிபே என்னை வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இதில் பலர் தப்பிய நிலையில் ஒருவர் மட்டுமே சிக்கியுள்ளார். அதிலும் அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாததால் தப்பினார். எனவே, மோசடி அழைப்புகளை நம்ப வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
News November 11, 2025
கோவை: தூக்கிட்டு தற்கொலை

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (36). இவர் கடந்த சில நாட்களாகவே வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முந்தினம் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


