News August 6, 2024

கெலமங்கலம் அருகே விவசாயியை கொன்றவர் கைது

image

கெலமங்கலம் அருகே காமையூரைச் சேர்ந்த விவசாயிக்கு 17 வயது மகள் இருந்தார். அவரை வெங்கட் ராஜ் என்பவர் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் நேற்று முன்தினம் சிறுமியை கடத்த முயன்றார். அதை தடுக்க முயன்ற தந்தையை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். அவரை கெலமங்கலம் போலீசார் நேற்று கைது செய்து சிறுமியை மீட்டனர்.

Similar News

News January 13, 2026

கிருஷ்ணகிரி: துக்க வீட்டுக்கு சென்ற பெண் பலி!

image

பெரிய ஜோகிப்பட்டியை சேர்ந்த மகேஸ்வரன் (52) நேற்று முன்தினம் (ஜன.12) தனது சித்தியான முருகம்மாளுடன் (54) துக்க வீட்டுக்கு சென்றுவிட்டு சாமல்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி – தி.மலை NH-இல் பின்னால் வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த முருகம்மாள் உயிரிழந்தார். இதையடுத்து மத்தூர் போலீசார் விக்னேஷ் (27) எனபவரை கைது செய்தனர்.

News January 13, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன.12) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 13, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன.12) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!