News January 10, 2025

கூடுதல் மறுவாழ்வு திட்டங்கள் வேண்டிய வழக்கு ஒத்திவைப்பு

image

உச்சநீதிமன்றத்தில் மாஞ்சோலை மக்களுக்கு கூடுதல் மறுவாழ்வு திட்டங்கள் வேண்டி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மக்கள் தரப்பு வாதங்களைக் கேட்ட பின்னர், தமிழ்நாடு அரசின் பதிலுக்காக வழக்கு விசாரணை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் மறுவாழ்வு திட்டம் குறித்து கூடுதல் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 19, 2025

நெல்லையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நவ.21 அன்று காலை 10:30 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றிதழுடன் பங்கேற்று பயனடையலாம். இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது என வேலை வாய்ப்பு துறை உதவி இயக்குனர் மரிய ஆண்டனி தெரிவித்துள்ளார்.

News November 19, 2025

நெல்லையில் காட்டு யானை வழுக்கி விழுந்து உயிரிழப்பு

image

மாஞ்சோலை அருகே கோதையாறு வனப்பகுதியில் அரிகொம்பன், புல்லட் ராதாகிருஷ்ணன் ஆகிய மூன்று காட்டு யானைகள் வேறு பகுதியில் இருந்து இங்கு கொண்டு வந்து விடப்பட்டன. இந்நிலையில் நேற்று திடீரென ஒரு காட்டு யானை பள்ளத்தில் வழுக்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது. மேலும் ராதாகிருஷ்ணன் யானை தான் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News November 19, 2025

பணம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

கூடங்குளம் அருகே கட்டுமான தொழில் செய்யும் பிரவீன் என்பவரிடம் சத்யாதேவி என்ற பெண் தன்னை சப் கலெக்டர் என கூறி அறிமுகமாகி அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி பிரவீனிடம் 17 பவுன் நகை, 8½ லட்சம் பணம் பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் சத்யாதேவி மற்றும் செல்லத்துரை ஆகிய இருவர் கைதான நிலையில் சுரேஷ் என்பவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!