News November 22, 2024
குழந்தை நல குழுவிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின் படி திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக்குழுவிற்கு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். இது அரசு பணி அல்ல. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் (https://dsdcpimms.tn.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News November 10, 2025
திருச்சி படுகொலை: அண்ணாமலை கண்டனம்

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருச்சி மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பில் ஒருவரை வெட்டி படுகொலை செய்திருப்பது, பொதுமக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது திருச்சியில் தான் தங்கியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு படுகொலை நடப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் அவலநிலையைக் காட்டுகிறது’.
News November 10, 2025
‘திமுகவிற்காக உழைக்கும் நபர்’: எம்எல்ஏ-வை புகழ்ந்த முதல்வர்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இல்ல திருமண விழாவில் இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், ‘எம்எல்ஏ பழனியாண்டி பசி, தூக்கம் இன்றி திமுகவிற்காக உழைக்கும் நபர். 20 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீரங்கம் தொகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றி உள்ளார். ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தும் வாய்ப்பை பெற்றுள்ளேன்’ என்றார்.
News November 10, 2025
திருச்சி அருகே சிக்கிய ராட்சத பாம்பு

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அடுத்த அயன்பொருவாய் குடியிருப்பு பகுதியில் சுமார் 12 அடி நீள மலைப்பாம்பு சுற்றி திரிவதாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு பகுதி அருகே கிடந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.


