News April 4, 2025
குளத்தில் மூழ்கிய கொத்தனார் உயிரிழப்பு

தக்கலை கஞ்சிகுழியை சேர்ந்த ஜெயக்குமார் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்கச் சென்றார். அப்போது எதிர்ப்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கி உள்ளார். இதையடுத்து அப்பகுதியினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 21, 2026
குமரி மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

குடியரசு தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் ஜன.26 அன்று காலை 11மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது என குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
குமரி: Certificate திரும்ப பெறுவது இனி ரொம்ப ஈஸி..!

குமரி மக்களே, உங்களது 10th, 12th , Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <
News January 21, 2026
நாகர்கோவில்: கல்லூரி மாணவர் தற்கொலை

நாகர்கோவில் பள்ளிகளைப் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (21). கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், சக மாணவர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் ஆகாஷ் கல்லூரிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த ஆகாஷ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


