News August 23, 2025

கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்!

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என 28 வருடங்களுக்கு மேலாக கும்பகோணம் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே கும்பகோணம் மாநகர அகில பாரத இந்து ஆன்மீக பேரவை சார்பில், கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

Similar News

News January 18, 2026

தஞ்சாவூர்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

image

சாத்தனூரைச் சேர்ந்த காளிதாஸ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவரது மனைவி சங்கீதா தனது தந்தை வீட்டிற்குச் சென்று வந்ததை காளிதாஸ் செல்போனில் தொடர்புக் கொண்டு கண்டித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சங்கீதா, கணவருக்கு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News January 18, 2026

தஞ்சாவூர்: வாய்க்காலில் பைக் பாய்ந்து ஒருவர் பலி

image

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் கோபு. திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்த இவர், பொங்கல் பண்டிகைக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று கோபு தனது மகள் ஹர்ஷவர்த்தினியுடன் அரியலூரில் வசிக்கும் தனது அக்காவுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுத்து விட்டு வீடு திரும்பிய போது, கபிஸ்தலம் வாய்க்காலில் பைக் பாய்ந்ததில் கோபு உயிரிழந்தார்.

News January 18, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.17) இரவு 10 முதல் இன்று (ஜன. 18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!