News April 18, 2024
கும்பகோணம் அருகே கோவில் தேரோட்டம்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் சீதாலட்சுமண அனுமன் கோதண்ட ராமசாமி கோவிலில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இவ்விழாவில் சீதா லட்சுமணன் அனுமன் சமேத ராமர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஹே ராம் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Similar News
News November 13, 2025
தஞ்சாவூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <
News November 13, 2025
தஞ்சை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சை மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News November 13, 2025
தஞ்சை: இளம்பெண் தற்கொலை முயற்சி

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி காவிரி புது ஆற்றுப்பாலத்தில் இருந்து நேற்று 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் ஆற்றில் குதித்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற தீயணைப்புத் துறையினர் இதனை கவனிக்கவே, அவரை பத்திரமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


