News January 11, 2025
குமரி நாதக நிர்வாகி பெருமித அறிக்கை

குமரி மாவட்ட நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,“நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பால் பெருமை அடைகிறேன்; தமிழ்நாட்டில் தமிழ் இனத்திற்கான அரசியலை முன்னெடுக்கும் ஒரே தமிழ் தேசிய அரசியல் கட்சியான நாம் தமிழருக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்திருக்கும் நம்பிக்கை” என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 9, 2025
குமரி: தந்தையை தீவைத்துக் கொளுத்திய மகன்

இடைக்கோடு அருகே முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த சிகாமணிக்கும் (70), இவரது மகன் சுனில் குமாருக்கும் (37)இடையே தகராறு ஏற்பட்டது. இதில் படுத்த படுக்கையாக இருந்த தந்தையை பெயிண்ட் கலக்க பயன்படுத்தும் திரவத்தை எடுத்து ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 9, 2025
BREAKING: குமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.9) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் இதற்கு ஏற்ப உங்களது திட்டங்களை வகுத்து கொள்வது நல்லது. இதேபோல் குமரி மாவட்டத்திற்கு நவ.12, 13 அன்றும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT
News November 9, 2025
குமரி: பாதுகாப்பு பணியில் 500 போலீசார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது.5 மையங்களில் இத்தேர்வு நடைபெறும் நிலையில் இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வுக்காக 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


