News November 19, 2025

குமரி: காட்டு யானை (இராதாகிருஷ்ணன்) உயிரிழந்தது

image

நீலகிரி பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட ‘இராதாகிருஷ்ணன்’ என்ற காட்டு யானை, கனமழையால் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. அப்பர் கோதையாறு பகுதியில் பெய்த மழையின் காரணமாக நேற்று எதிர்பாராதவிதமாக சுமார் 20 அடி பள்ளத்தில் வழுக்கி விழுந்தது. காயங்கள் ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே அது உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News January 17, 2026

குமரி: நிலம் வாங்கியவர்கள் கவனத்திற்கு..!

image

அனுமதியற்ற மனைப்பிரிவு வரமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், குமரி மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 17, 2026

குமரி: ஆட்டோ கவிழ்ந்து பரிதாப பலி

image

திட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் மாகின் (59). ஆட்டோ டிரைவரான இவர் ஆட்டோவில் நேற்று நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார். மேல புத்தேரி அருகே வரும்போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. படுகாயம் அடைந்த மாகின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 17, 2026

குமரி: நாளை கடைசி நாள்; ஆட்சியர் அறிவிப்பு!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் விடுபட்டவர்கள் மற்றும் புதியவர்கள் தங்கள் பெயர்களை இணைத்துக் கொள்ள ஜனவரி 18-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!