News November 19, 2025
குமரி: காட்டு யானை (இராதாகிருஷ்ணன்) உயிரிழந்தது

நீலகிரி பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட ‘இராதாகிருஷ்ணன்’ என்ற காட்டு யானை, கனமழையால் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. அப்பர் கோதையாறு பகுதியில் பெய்த மழையின் காரணமாக நேற்று எதிர்பாராதவிதமாக சுமார் 20 அடி பள்ளத்தில் வழுக்கி விழுந்தது. காயங்கள் ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே அது உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 16, 2026
குமரி: பொங்கல் கொண்டாட்டத்தில் ஒருவர் வெட்டிக் கொலை

நாகர்கோவில் அருகே சரலூரில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழா கலை நிகழ்ச்சியில் நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் நிகழ்ச்சிகளை ரத்து செய்து அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் ரமேஷ் என்பவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். மணிகண்டன் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கோட்டாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
News January 16, 2026
குமரி : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY NOW!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <
News January 16, 2026
குமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

(15.01.2026) கன்னியாகுமரி மாவட்ட இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .


