News November 19, 2025
குமரி: காட்டு யானை (இராதாகிருஷ்ணன்) உயிரிழந்தது

நீலகிரி பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட ‘இராதாகிருஷ்ணன்’ என்ற காட்டு யானை, கனமழையால் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. அப்பர் கோதையாறு பகுதியில் பெய்த மழையின் காரணமாக நேற்று எதிர்பாராதவிதமாக சுமார் 20 அடி பள்ளத்தில் வழுக்கி விழுந்தது. காயங்கள் ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே அது உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 24, 2026
குமரி: விஷம் குடித்து பெண் தற்கொலை

கருங்கல் அருகே பாலூர் அரசமூட்டு விளையை சேர்ந்தவர் விஜயகுமாரி (46). கணவருக்கும், இவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் விஜயகுமாரியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த விஜயகுமாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 24, 2026
குமரி: கந்துவட்டி தொல்லையா? உடனே CALL

குமரி மாவட்டத்தில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே, பொதுமக்கள் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டாலோ மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரிலோ அல்லது PUBLIC FEEDBACK CENTRE எண்கள் 7708239100, 8122223319 மூலமாக தொடர்பு கொள்ளலாம். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. SHARE IT
News January 24, 2026
குமரி: பாலியல் வழக்கில் இளைஞருக்கு தண்டனை

நாகர்கோவிலை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (28). இவர் 2022ம் ஆண்டு வேலைக்கு சென்ற இடத்தில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ்குமாருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3,000 அபராதம் விதித்தும் நேற்று தீர்ப்பு வழங்கினார்.


