News May 7, 2025
குமரி: உதவி காவல் ஆய்வாளர்கள் பயிற்சி தேர்வு

உதவி காவல் ஆய்வாளர்கள் தேர்வுக்கான இலவச பயிற்சி நாகர்கோவில் ஆயுதப்படையில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஏற்பாட்டின் படி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பயிற்சி தேர்வுகள் வருகிற மே.4ம் தேதி காலை 10 மணிக்கு மாநில அளவில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள 9080562503 என்ற எண்ணில் அழைத்து தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
Similar News
News December 9, 2025
குமரியில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.கன்னியாகுமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 9, 2025
நாகர்கோவில் ரயிலில் பெண் திடீர் பலி

நேற்று (டிச.8) திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்தது. அப்போது அதில் பயணம் செய்த பெண்ணுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. உடனே, வள்ளியூர் ரயில் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் உயிரிழந்த பெண் திருவனந்தபுரத்தை சேர்ந்த பெபியோலா (63) என தெரிந்துள்ளது.
News December 9, 2025
நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் நுள்ளிவிளை பகுதியில் அமைந்துள்ள பழைய ரயில்வே மேம்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு அங்கு புதிய பாலம் அமைக்கும் பணி நாளை தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே துறை செய்து வருகிறது. இதனை ஒட்டி திங்கள் சந்தை – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


